Ticker

6/recent/ticker-posts

Video -அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் - நால்வர் பலி


அமெரிக்காவின் லூவில் கென்டக்கியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார வங்கியொன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வங்கியொன்றின் ஊழியர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன் அதனை நேரடிஒளிபரப்பு செய்துள்ளார்.

ஓல்ட் நசனல் வங்கியின் கோர்னர் ஸ்டேர்ஜன் என்ற ஊழியரே இந்த துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

40,45 60,63 வயதுடைய நால்வர் உயிரிழந்துள்ளனர்.

காலை 8.30 மணிக்கு வங்கிக்குள் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.வங்கி பொதுமக்களிற்காக திறக்கப்படுவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வங்கி பணியாளர்களிற்கான அதிகாலை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments