அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் இரு இலங்கையர்கள் நீர் நிலையொன்றில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு குழுவினர் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர் நிலையில் நீராடச் சென்றுள்ள போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது 21 மற்றும் 59 வயதுகளையுடைய இரு ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉
0 Comments