மத்திய கிழக்கு நாடான யேமனில் சனநெரிசலினால் குறைந்தபட்சம் 322 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 322 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் சனாவில் உள்ள பாடசாலை ஒன்றில், புனித ரமழானை முன்னிட்டு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பெறுவதற்காக மக்கள் திரண்டிருந்தபோது இச்சம்பம் இடம்பெற்றதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
5,000 யேமன் றியால் (சுமார் 6,400 இலங்கை ரூபா, சுமார் 1,650 இந்திய ரூபா) உதவித் தொகையைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இதன்போது 85 பேர் பலியானதுடன் 322 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறார்களும் அடங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉
0 Comments