பாலமுனை 1ம் பிரிவில் ஹைமா பள்ளிவாசல் மஹல்லா பிரிவில் வசித்து வரும் மீராலெவ்வை றசீனா எனும் சகோதரி தனது சொந்த குடியிருப்பு நிலத்தின் ஒரு பகுதியினை பள்ளிவாசலுக்கு வக்பு செய்து பள்ளிவாசல் நிருவாகத்திடம் சட்டத்தரணி ஊடாகா உத்தியோக
பூர்வமாகவ தர்ம நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (07) சனிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பாலமுனை ஹைமா பள்ளிவாசல் தலைவரும் ஊடகவியலாளருமான ஐ.அஹமத் ஸிறாஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரும் ஸஹ்வா இஸ்லாமிய்யா அரபுக்கலாசாலையின் இஸ்தாபக அதிபருமான அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாசிம் ஸுரி (மதனி) ,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்,
பள்ளிவாசல் உப தலைவர் எம்.ஜே.எம்.
றிஸ்வான்,செயலாளர் எஸ்.ஹைதர் உட்பட நிருவாகிகள் மஹல்லா வாசிகள்
மற்றும் காணியை வழங்கிய சகோதரரின் மைத்துனர் எம்.பீ.ஏ.கபூர் ஆகியோரும்கலந்து கொண்டனர்.
தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉
0 Comments