Ticker

6/recent/ticker-posts

Video -பாகிஸ்தான் நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்டசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

இரு நாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments