Ticker

6/recent/ticker-posts

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பின்னர் கைது!


எம்.வை.எம்.சியாம்)

கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பிறகு நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி 50 வயதுடைய பெண்ணொருவர் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் 8 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய அவர், கட்டுநாயக்க இராணுவ முகாமில் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் இறுதி யுத்தத்தின்போது தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனால் துன்புறுத்தப்படுவதாக தாய் பல முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, முன்னதாக மகன் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தடயவியல் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் சந்தேக நபர் கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கெப்பத்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments