Ticker

6/recent/ticker-posts

17 மாணவர்களின் தலைமுடியை வெட்டிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர் தொடர்பில் விசாரணை.


கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பருவத்தேர்வு தொழில்நுட்ப பாட பரீடசைக்கான விடைகளை எழுதும் முன்னர் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.

தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாமல் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.


இதையடுத்தே குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments