Ticker

6/recent/ticker-posts

தனியாக கழன்று ஓடிய பஸ் சக்கரம் – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்..


நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சக்கரம் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சக்கரம் அச்சில் இருந்து திடீரென விலகியது.

இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments