Ticker

6/recent/ticker-posts

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி… Live Video


 Live Link Video : 

துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 உயிரிழந்துள்ளதுடன், இப்பூகம்பத்தினால் அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 245 பேர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. 

துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.

துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உடைந்தன. 

இப்பூகம்பத்தினால் துருக்கியில் குறைந்தபட்சம் 284 பேர் உயிரிழந்துள்ளனர் என உப ஜனாதிபதி புவாத் ஒக்டே தெரிவித்து;ளளார். மேலும் 2300 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.


இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, சிரியாவின் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாத்திரம் குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்‍டிலுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி சிரியாவில் குறைந்தபட்சம் 245 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேழும் தகவலுக்கு உள்ளே 🫵

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments