Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுமி ஹமிதா உயிரிழந்த சோகம்.


வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.​


நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.​


என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.​


சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​


பிரதேசவாசிகளின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்ட போதிலும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.​


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments