Ticker

6/recent/ticker-posts

மோதரையில் 7 மீன்பிடி படகுகள் தீக்கிரை


மட்டக்குளியின் மோதர கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தவிர மேலும் 2 படகு இயந்திரங்களும் சில மீன்பிடி சாதனங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

ஹெட்டியாவத்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

தீபரவலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments