Ticker

6/recent/ticker-posts

ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடையவர் தமிழகத்தில் கைது!


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (டிச 28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் காரை வெடிவைத்து தகர்த்த சம்பவத்துடன் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments