Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சியில் இராணுவத் தளவாடங்கள், நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு


கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 ஆவது சிங்க படைப்பிரிவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து இன்று (12) சோதனையிட்ட போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத் தளவாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேகத்திற்கிடமான வீடு சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது இடியன் துவக்கு 3, கட்டுத்துவக்கு 11, இடியன் துவக்கின் மரப்பிடிகள் 5, ரீ 56 ரவைகள் 250 உட்பட, 8 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தினடிப்படையில் 31வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments