Ticker

6/recent/ticker-posts

பளை விபத்தில் ஒருவர் பலி : 17 பேர் காயம்


கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.


திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.


பளை முள்ளியடிபகுதியில் ஏ – 9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டுள்ளது.


இதன் போது பஸ்ஸில் பயணித்த ஒருவர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே ஒரு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments