Ticker

6/recent/ticker-posts

பொலிஸாரின் அராஜகம் தொடர்பில் கடும் கண்டனம். Video



பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து களுத்துறையில் இருந்து கொழும்புக்கு நடைப்பயணமாக வந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இரண்டு பெண்களும் தமது எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தனர்.

இதன்போது வாதுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் பேரணியை தடுத்த பொலிஸார், கொரகபொல பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

இதன்போது சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கழுத்தை பிடித்து தல்லுவது தொடர்பான காணொளிகள் சமூகஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில். குறித்த சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு,

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments