Ticker

6/recent/ticker-posts

15 வயதான தனது சொந்த மகளை கர்ப்பிணியாக்கி குழந்தைக்கு தாயாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!


15 வயதான தனது சொந்த மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரை கர்ப்பிணியாக்கியதன் ஊடாக குழந்தை பெறச் செய்த சம்பவம் தொடர்பில் தந்தை ஒருவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தினாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட தந்தையொருவருக்கு வேறு வோறாக தலா 15 வருடக் கடூழிச் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 45 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டதுடன் மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நஷ்டஈடு செலுத்தத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments