Ticker

6/recent/ticker-posts

கொள்ளையர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம், குறுக்கே சென்ற பஸ்ஸில் பயணித்த இளம் பெண்மீது பட்டு பரிதாபமாக உயிரிழப்பு.


மீரிகம தங்கொவிட்ட பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபானசாலையில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பொழுது பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் சூடு பட்டதாக தெரிவிக்க படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 29 வயதுடைய பெண்ணின் சடலம் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments