Ticker

6/recent/ticker-posts

அட்டாளைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 73 வயதான நபர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

பாறுக் ஷிஹான்)

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை ஆளங்குளம் வீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5 பகுதியை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் 9 கிராம் 880 மில்லி கிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்டபிள்களான ராஜபக்க்ஷ (24812) அபேரட்ன (75812) நிமேஸ் (90699) பியுமக (94143) சாரதி குணபால (19401) ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன.


சந்தேக நபர் சான்று பொருளுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments