அசாதாரண காலநிலை காரணமாக வரக்காபொல - கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று (14) மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்குண்டிருந்த பெண்ணின் உடலம் முதலில் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் காணாமல் போன 24 வயது மகனின் சடலமும் பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் உடலம் கண்டெடுக்கப்பட்டதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் இடம்பெற்ற போது, குடும்பத் தலைவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தின் போது, உயிரிழந்த பெண்ணின் பத்து வயதான இளைய மகன், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தற்போது தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments