Ticker

6/recent/ticker-posts

அடிபட்டாலும் பரவாயில்லை பிரச்சனையை தீர்க்க வேண்டி இருக்கிறது!

 


பள்ளத்தில் விழுவது மூளைக்கு நல்லது என்று ஒரு கதை இருக்கிறது.

இதனடிப்படையில் இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் பிரபலமான முடிவுகள் என்றும் சொல்ல முடியாது.

இதனால்தான் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கின்றன தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கும் போது ரணில் தனது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க மறந்துவிட்டார். ஆனால் இலங்கை விழுந்துள்ள இந்த பாதாளத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க சில கடினமான முடிவுகள் இந்த வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை வருமானத்தை ஈட்டுவதற்கு ஏற்றுமதியை நம்பியுள்ளது. மேலும் சுற்றுலா மற்றும் விவசாயப் பொருட்களைப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சேவைகளை இழந்த மற்றும் வேலை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பட்ஜெட் யோசித்துள்ளமை பாராட்ட வேண்டிய விடயமாகும். அதேநேரம் கடந்த அரசாங்கம் நீண்ட காலமாக அரசுப் பணியில் இருந்ததால், செலவுப் பக்கம் அதிகரித்து, நிறுவனங்கள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என நினைத்து எந்தத் தலைவரும் அரசு நிறுவனங்களில் கைவைக்கவில்லை .

ஆனால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க ரணில் தீர்மானம் எடுத்துள்ளார்.

එයාර්ලංකා வின் இன்றைய நிலைமைக்கு காரணம் ராஜபக்சாக்கள்தான். ஆனால் தனியார் துறையை முறையான நிர்வாகத்திற்கு உட்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும். தற்போது மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்தினால் தீர்க்க முடியாததன் விளைவே தொடர்ச்சையாக நஷ்டத்தில் விழுகிறார்கள்.

இருப்பினும் அப்பிரச்சனைக்கான முடிவினை தனியார் துறையினால் எடுக்க முடியுமா ? அவ்வாறு தனியார் துறையினால் அதற்கான தீர்வினை எடுக்க முடிந்தால், அந்நிறுவனங்களை ஸ்திரப்படுத்த வேண்டும்.

இவை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் முழுமையான செயற்பாடாக இல்லாமலும் இருக்கலாம், அதேபோல் பிரச்சனைகளை நீடிக்கும் ஒரு செயட்பாடும் அல்ல.

கடந்த அரசாங்கத்தினால் வேருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் தண்டும் சேர்ந்து அழுகியது. அதற்கு மாறாக, ரணில் அழுகுவதை நிறுத்தி, தண்டு வளரும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியுமானால், அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து நாங்கள் பார்க்கக்கூடியது, இன்று கடன் மறுசீரமைக்கப்படுகிறது. அதன் மூலம் நாம் கடனை செலுத்தக்கூடிய நாடு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதைச் செய்த பிறகு, புதிய கடன் உதவியைப் நாங்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

(நீங்கள் நிதி நிதியிலிருந்து ஆதரவைப் பெறலாம். அதுதான் நாட்டுக்கு அவசரத் தேவை இல்லையா? ) இவற்றில் ஒன்றிரண்டு முடிவுகளைத் தவிர, மற்றயவை பிரபலமான முடிவுகள் அல்ல. அதனால்தான் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும் பரவாயில்லை ரணில் மக்களிடம் அடி வாங்கியாவது பிரச்சினையை தீர்க்க முயல்வதே முக்கியம். பிரச்சனைகள் முடிவுக்கு வந்தால் அடித்தவர்கள் வருந்துவார்கள்.

எனவே அடிக்கும் முன் இதை யோசியுங்கள். அப்போது என்ன நடக்கப் போகிறது என்பது ஓரளவுக்கு உங்களுக்கே புரியும்.
உண்மையில், இந்த பட்ஜெட்டை பாரம்பரிய கோணத்தில் பார்க்க முடியாது. மூன்றாவது கண்ணால் பார்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments