Ticker

6/recent/ticker-posts

லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை


 மருதானையில் கடந்த 30ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகரவை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்டிருந்த அவர், திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் இன்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவரை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments