Ticker

6/recent/ticker-posts

மகன் இறந்த சிறிது நேரத்தில் தாயும் தூக்கிட்டு தற்கொலை

 


வியாசர்பாடி :வியாசர்பாடியில், தந்தை திட்டியதால் விரக்தியடைந்த பட்டதாரி வாலிபர், தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த சோகத்தில், அவரின் தாயும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடி, கரிமேடு, 2வது தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன், 53; இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் 'பிரின்டிங் பிரஸ்' வைத்துள்ளார். இவருக்கு இளவரசி, 50, என்ற மனைவியும், சுசில், 21, என்ற மகனும் உள்ளனர். பி.காம்., பட்டதாரியான சுசில், எம்.கே.பி.நகர் மற்றும் சேலைவாயல் பகுதிகளில், நடன பள்ளியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் பல நாள், நடன பள்ளியில் இருந்து வீட்டிற்கு, இரவில் தாமதமாக வந்துள்ளார். இதனால், ரகுநாதன் சுசிலை கண்டித்து வந்தார். 

நேற்று முன்தினம் இரவும், இதுபோல சுசிலை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுசில், நேற்று மாலை வீட்டின் அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உடனடியாக, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல், அவரின் தாய் இளவரசி அழுது கொண்டே, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.சிறிது நேரத்தில் அவரும், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.கே.பி.நகர் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.மகன் இறந்த சோகத்தில், தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments