A.G.அப்துர் ரஹ்மான் (ரியால் ஹாஜி) தனது முழுமையான நிதிப் பங்களிப்பின் ஊடாக ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில், அப்துர் ரஹ்மான் மாவத்தையில் தனிக்கிராமத்தை உருவாக்கி குடியேற்றப்பட்ட மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது மாத்திரமில்லாமல் தனது சொந்த நிதியில் பள்ளிவாயல் மற்றும் பொது கட்டிடங்களுக்கு காணிகள் வழங்கியுள்ளார்.
அத்துடன் நேற்று (O1.09.2022) மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொழிலதிபர் றியால் ஹாஜியார்
ஏற்கனவே சவுக்கடி வீதியில் மாதிரி கிராமத்தை ஒன்றை உருவாக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த உலகில் அப்துல் றஹ்மான் றியால் ஹாஜியார் செய்கின்ற மனித நேய உதவிகளை போன்று ஏனைய செல்வந்தர்களும் பேராசைக்கு அடிபணியாமல் ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
0 Comments