Ticker

6/recent/ticker-posts

திருமணத்திற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த 34 வயது இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.

 


கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் நேற்று (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வரணி பகுதியைச் சேர்ந்த 34 வயதான அருண்குமார் என்ற குறித்த இளைஞன் தனது திருமணத்திற்காக கடந்த சில மாதங்களின் முன்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையிலேயே இவ்வாறு பரிதாபமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments