Ticker

6/recent/ticker-posts

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சர் விஜயதாச தெரிவித்த கருத்து..!

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார். நிபந்தனைகளுடன் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்காக காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு அரசியல்வாதியும் 6 மாத காலத்துக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 7 வருடங்களுக்கு இரத்துச் செய்யப்படும். எனினும் அரசியலமைப்பின் 34 (2) பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனநாயக உரிமை வழங்கப்படும். எனினும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியலமைப்பின் 34 (1) (ஈ) பிரிவின்படியே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.

எவ்வாறிருப்பினும் தேவையான சந்தர்ப்பங்களில் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கலாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இவ்வாறான நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பே வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததையும் அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டினார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments