Ticker

6/recent/ticker-posts

நேற்றிரவு மட்டக்குளியில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான விபரங்கள்.

 


நேற்றிரவு (29) மட்டக்குளி அலிவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


அலிவத்தை ஸ்ரீ கல்யாணிகங்கா மாவத்தையில் அதே பகுதியைச் சேர்ந்த ஹசித சதுரங்க என்ற அலிவத்தே ஹசித என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அலிவத்த ஹசித சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், ஐஸ் மற்றும் போதைப்பொருள் கொண்டு வந்ததாக சிலர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதை அடுத்து, அவர் வீட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பின்னர், 09 mm ரக துப்பாக்கியால் தோட்டா தீர்ந்து விடும் வரை சுட்டுக் கொலைச் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர் முன்னர் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் எனவும் பின்னர் அந்த போதைப்பொருளை பாவித்து பழகியவர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த அலிவத்தே ஹசித மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் இருவரில் ஒருவரின் பெயரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஹசித தெரிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments