Ticker

6/recent/ticker-posts

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை..

 


காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments