Ticker

6/recent/ticker-posts

பல ஆண்­க­ளுடன் பாலியல் உறவுகொள்ள நிர்ப்­பந்­தித்த கண­வனை காதலன் மூலம் சுட்­டுக்­கொன்ற மனைவி..

 தனது கண­வனை படுக்­கையில் வைத்து சுட்­டுக்­கொல்­லு­மாறு தனது காத­லனை கோரி­ய­தாக ஒப்புக்­கொண்ட அமெரிக்கப்  பெண்­ணொ­ரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் ஆயுள்கால சிறைத்தண்­டனை விதித்­துள்­ளது.

வேறு ஆண்­க­ளுடன் கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­ப­டு­மாறு தன்னை அடிக்­கடி நிர்ப்­பந்­தித்ததால் கண­வனை கொல்வதற்கு தான் தீர்­மா­னித்­த­தாக அப்பெண் கூறி­யுள்ளார்.

ஒக்­ல­ஹாமா மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்டி இவான்ஸ் எனும் 49 வய­தான பெண்­ணுக்கே இத்தண்டனை விதிக்­கப்­பட்­டது.

கிறிஸ்டி இவான்ஸும் சமயப் போத­க­ரான அவரின் கணவர் டேவிட் இவான்ஸும் 3 தசாப்த காலமாக இணைந்து வாழ்ந்தவர்கள். இவர்­க­ளுக்கு 3 பிள்­ளை­களும் உள்­ளனர்.

ஆனால், அவர்­களின் அந்­த­ரங்க வாழ்க்கை விப­ரீ­த­மாக இருந்­தது. வேறு ஆண்­க­ளுடன் கூட்­டாக பாலியல் உறவில் ஈடுபடுமாறு தனது கணவர் இவான்ஸ் தன்னை அடிக்­கடி வற்­பு­றுத்­தி­னா­ரென நீதி­மன்­றத்தில் கிறிஸ்டி இவான்ஸ் தெரிவித்தார்.

இத்­தொந்­த­ரவை பொறுக்க முடி­யாமல், தனது கணவர் இவான்ஸை படுக்­கையில் வைத்து சுட்டுக்கொல்­லு­மாறு காதலன் கலீல் ஸ்கொயாரை தான் கோரி­ய­தாக நீதி­மன்­றதில் கடந்த வாரம் கிறிஸ்டி இவான்ஸ் ஒப்­புக்­கொண்டார்.

கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்­காக 27 வய­தான கலீல் ஸ்கொயரை இத்­தம்­ப­தி­யினர் முதல் தட­வை­யாக கடந்த வருட முற்­ப­கு­தியில் சந்­தித்­தனர்.

எனினும் பின்னர் கலீல் ஸ்கொய்­ருக்கும் கிறிஸ்டி இவான்­ஸுக்­கும இடையில் இர­க­சிய உறவு ஆரம்­ப­மா­கி­யது. 2021 மார்ச் 22 ஆம் திகதி தனது வீட்டில் டேவிட் இவான்ஸ் உறங்கிக் கொண்டிருந்­த­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

வீட்­டுக்குள் புகுந்த இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர் இக்­கொ­லையைச் செய்­துள்­ள­தாக முதலில் கிறிஸ்டி கூறினார்.

எனினும், இக்­கொ­லைக்கு தானும் உடந்தை என்­பதை கிறிஸ்டி பின்னர் ஒப்­புக்­கொண்டார். இக்குற்றம் தன்னை 'உயி­ருடன் திண்­ப­தாக' உணர்ந்­ததால் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வ­தற்கு தான் தீர்­மா­னித்­த­தாக அவர் கூறினார்.

இதை­ய­டுத்து கிறிஸ்­டியும் கலீல் ஸ்கொயரும் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்­நி­லையில் கிறிஸ்டி இவான்­ஸுக்கு ஆயுட்­கால சிறைத்­தண்­டனை விதித்து நீதி­பதி ஸ்டீவன் கேசிங்கர் தீர்ப்­ப­ளித்தார். 2060 ஆம் ஆண்டின் பின்­னரே அவர் பரோலில் வெளி­வ­ரு­வற்கு தகுதி பெறுவார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேறு ஆண்­க­ளுடன் பாலியல் உறவு கொள்­ளு­மாறு தன்னை நிர்ப்­பந்­தித்த கணவன், சில வேளைகளில் ஒரே நேரத்தில் பலருடன் பாலியல் உற­வு­கொள்­ளு­மாறு நிர்ப்­பந்­தித்­த­தா­கவும் நீதிமன்­றத்தில் கிறிஸ்டி இவான்ஸ் கூறினார்.

மொத்­த­மாக 50 முதல் 100 ஆண்­க­ளுடன் பாலியல் உற­வு­கொண்­ட­தா­கவும் அவர் கூறினார்.

கிறிஸ்டி இவான்ஸ் தனது நட­வ­டிக்­கைக்கு பொறுப்­பேற்­ப­தா­கவும், என்ன தண்­டனை விதித்­தாலும் அதை ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக உள்ளார் எனவும் அவரின் சட்­டத்­த­ரணி ஜோய் மிஸ்கெல் கூறினார்.

இத்­தம்­ப­தியின் 29 வய­தான மகள், 2 மகன்­மாரில் ஒரு­வரும் தனது தந்­தையின் துன்­பு­றுத்­தல்கள் குறித்து விப­ரித்­தனர். தம்மை தந்தை தலையில் தாக்­குவார் எனவும், தலை­மு­டியைப் பிடித்து தூக்குவார் எனவும் அவர்கள் கூறி­யுள்­ளனர்.  

தமது தந்­தையின் நட­வ­டிக்கை குறித்து பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்த பின்னர், பிள்­ளைகள் மூவரும் தாத்தா பாட்டியிடம் தங்கவைக்கப்படும் அளவுக்கு இத்துன்புறுத்தல்கள் மோசமாக இருந்தன எனவும் அவர்கள் கூறினர்.

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலீல் ஸ்கொயரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண் டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments