Ticker

6/recent/ticker-posts

கடும் மழை... ஆற்றுக்கருகில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாட்டியும், பேத்தியும்

 


பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, பொகரவெவில பிரதேசத்தின் ஊடாக களனி ஆற்றில் பாயும் கால்வாயை கடக்கச் சென்ற பாட்டியும் அவரது பேத்தியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.


பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக முன்பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பேத்தியை அழைத்துக் கொண்டு சென்ற போது, ​​ஹிட்டிகேகம விகாரைக்கு அருகில் உள்ள கால்வாயை கடக்கச் சென்ற இருவரும் கால்வாய் வெள்ளத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்ததாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

பாட்டிக்கு 60 வயதும் பேத்திக்கு 5 வயதும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாட்டியின் சடலம் கால்வாய்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன பேத்தியின் சடலத்தை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகள் மற்றும் பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments