Ticker

6/recent/ticker-posts

பள்ளி நிர்வாகிகளுக்கு கடும் நிபந்தனைகள்.

 


ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள், நிர்­வா­கிகள் தெரிவில் கடு­மை­யான நிபந்­த­னைகள் விதிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், வக்பு சபையும் தீர்­மா­னித்­துள்­ளன.


அனு­ரா­த­புரம் அசரிகம ஜும்­ஆப்­பள்­ளி­வாசல் நிர்­வா­கி­யொ­ருவர் அண்­மையில் சக நிர்­வாகி ஒரு­வரால் தாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்தே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.


பணிப்­பாளர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், “உழ்­ஹிய்யா இறைச்சி பகிர்ந்­த­ளிப்­பதில் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக அண்­மையில் இடம்­பெற்­றுள்ள இக்­கொலைச் சம்­பவம் தொடர்பில் சம்­பவம் நடந்த பிராந்­தி­யத்­திற்குப் பொறுப்­பான முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கள உத்­தி­யோ­கத்­த­ரி­ட­மி­ருந்து பூர­ண­மான அறிக்­கை­யொன்று கோரப்­பட்­டுள்­ளது. அனு­ரா­த­புரம் பர­சன்­கஸ்­வெவ பொலி­ஸி­லி­ருந்தும் அச்­சம்­பவம் தொடர்­பான அறிக்­கை­யொன்­றினை திணைக்­களம் கோரி­யுள்­ளது. அறிக்­கைகள் கிடைக்­கப்­பெற்­றதும் இது தொடர்பில் ஆராய்ந்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக திணைக்­களம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும்.


பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­படும் நிர்­வா­கிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக இருப்­பதே இவ்­வா­றான துர்ப்­பாக்­கிய சம்­ப­வங்­க­ளுக்குக் கார­ண­மாகும். ஊரில் தகு­தி­யா­ன­வர்கள் இருக்கும் நிலையில் தகு­தி­யற்­ற­வர்கள் நிய­மிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். நிர்­வா­கி­க­ளாக தெரிவு செய்­யப்­ப­டுவோர் சமூ­கப்­பற்­றுள்­ள­வர்­க­ளா­கவும் மார்க்­கப்­பற்­றுள்­ள­வர்­க­ளா­கவும் கல்­வித்­தி­ற­மை­யுள்­ள­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று அர­சியல் மற்றும் பண பல­முள்­ள­வர்­களே பெரும்­பா­லான பகு­தி­களில் நிர்­வ­ாகி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். பள்ளி நிர்­வா­கிகள் கொலை செய்யும் அள­வுக்கு மாறி­யி­ருக்­கி­றார்கள் என்றால் அதனை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் எமது சமூ­கத்தை ஏனைய சமூ­கத்­தினர் மத்­தியில் தவ­றாக மதிப்­பி­டு­வ­தற்கு கார­ண­மாக அமையும்.



திணைக்­க­ளமும், வக்பு சபையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தெரி­வின்­போது பின்­பற்ற வேண்­டிய நிபந்­த­னைகள் மற்றும் தகு­திகள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றன. இது தொடர்­பான வழி­காட்­டல்­களும் விதி­மு­றை­களும் விரைவில் அமுல் நடத்­தப்­படும் என்றார்.


ஹஜ்ஜுப் பெருநாள் உழ்­ஹிய்­யா­வுடன் தொடர்புபட்ட முரண்பாட்டையடுத்து பள்­ளி­நிர்­வாகியான கட்­டுத்­தம்பி ஷரீப் எனும் 67 வய­தான நபர் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.


இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட அறுவர் பரசன்கஸ்வெவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் பள்ளிவாசல் நிர்வாகியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரே பிரதான சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் அவரது உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது.- Vidivelli

Post a Comment

0 Comments