Ticker

6/recent/ticker-posts

கேரளாவில் 95 வயது மூதாட்டி உயிரிழப்பு: சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்கள்..! வைரலாகும் படம்


 சாவு வீட்டில் யாரையாவது சிரித்த முகத்தில் பார்க்க முடியுமாஆனால் கேரளாவில் ஒருகுடும்பமேஇறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய்புகைப்படம் எடுத்ததுசலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம்அந்தகுடும்பத்தின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார்இவரதுகணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.


இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள்அனைவரும் உலகின் பல்வேறுநாடுகளில் வசிக்கிறார்கள்ஆனால் 4 தலைமுறைகளைச் சேர்ந்த அவர்களில் பலர்மூதாட்டியின் இறுதிமூச்சின்போது அருகில் இருக்க வந்துவிட்டார்கள்.


மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள்அதற்குமுன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழுபுகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்அந்த படம் சமூக வலைதளத்தில் பரவியதும்தான்சர்ச்சை பற்றிக்கொண்டது.


'இது என்னப்பா... எழவு வீடாபார்ட்டி கொண்டாட்டமாஇப்படியா சிரிச்சிக்கிட்டு போஸ்கொடுப்பாங்க?' என்று சிலர் சிடுசிடுக்கவேறு சிலரோ, 'துக்க வீடு என்றாலே இறுக்கமானமுகத்துடன்தான் இருக்க வேண்டுமாஇப்படி கலகலப்பாகவும் இருக்கலாமே?' என்றுஆதரவுக்கொடி பிடிக்கிறார்கள்.


மூதாட்டியின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ கூறும்போது, 'மற்றவர்களின்கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லைநிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள்தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வைவெளிப்படுத்தினோம்பின்னர்அவருடனான சிரிப்பும்நெகிழ்வுமான தருணங்களைஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம்அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடைகொடுத்தோம்என்கிறார்.


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments