Ticker

6/recent/ticker-posts

இன்றைய தினமும் காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு..


காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சுமார் 40 வயதுடைய ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் நபர் ஒருவரின் சடலம் ஒன்று காலி முகத்திடல் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments