Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிள்களை நேற்று இரவு யானை தாக்கியுள்ளது...


 மட்டக்களப்பு, வெல்லாவெளியில் பெற்றோல் அடிப்பதற்க்காக இரவு பகலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை நேற்று இரவு யானை தாக்கியுள்ளது.



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் 07 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதமாக்கிவிட்டு, வீதியை கடந்து சென்றுள்ளதாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாக்காலி யானைக் கூட்டங்களினால் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மூன்று சைக்கிள்கள் முற்றாகவும், 4 சைக்கிள்கள் சிறிதளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments