![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi38FuR7sErKe2FAsAJgF2waut4fS1TR_d-9RmCe9nOlH4swdmMNklXSFntRwR6L9rculX_4e-Ui4RrDOvePFgln0OTAcBxBCF03d7sUT2ifBRa4kzNhc-6Aq-JO8JgugdYfzi5vi55Y_enhiKPtFH1J1IMV_qlLdXRldlAfi932T9yZApVzKgJYzpqwg/w640-h362/Local%20News.jpg)
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஜூலை 4ஆம் திகதி அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
0 Comments