Ticker

6/recent/ticker-posts

இலங்கை தமிழர்களை பிரிட்டனில் இருந்து வெளியேற்ற உத்தரவு

 


பிரிட்டனில் (UK) சட்டப்பூர்வமாக குடியேறியுள்ள இலங்கை தமிழ் குடும்பங்கள், உள்நாட்டு துறை அமைச்சகத்தின் புதிய விசா கட்டுப்பாடுகள் காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பராமரிப்பு துறைப் பணியாளர்களின் (Care Workers) குடும்ப விசாக்கள் மீது பிரிட்டன் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, அங்குள்ள பல குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் (Removal Notices) அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2024–2025ஆம் ஆண்டுகளில் புதிய விசா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே பிரிட்டனுக்கு வந்திருந்த போதிலும், தற்போது குறைந்தது ஐந்து குழந்தைகளும் (சிலரது வயது வெறும் ஐந்து மட்டுமே) ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசின் மதிப்பீடுகளின்படி, பராமரிப்புத் துறை வேலைகளுக்காக விண்ணப்பித்த 100,000 பணியாளர்களுடன், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 120,000 பேர் (Dependants) விசா பெற்று அந்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, வெளிநாட்டுப் பணியாளர்களின் குடும்ப விசாக்களுக்குப் பிரிட்டன் அரசு அண்மையில் தடை விதித்ததுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முறைகளையும் முடக்கியுள்ளது.

அரசின் இந்த அதிரடி விசா கெடுபிடி நடவடிக்கையானது, அங்கு சட்டப்பூர்வமாக வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ்க் குடும்பங்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments