Ticker

6/recent/ticker-posts

சூட்கேசில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

 



சீதுவ, முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி! அந்த வீட்டின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பயணப் பெட்டிக்குள் (Suitcase) இருந்து 79 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மூதாட்டி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததை கொலையாளிகள் முன்கூட்டியே நோட்டமிட்டுள்ளனர். மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கிருந்த CCTV கேமராக்களை அறுத்தெறிந்து, தொலைபேசி வயர்களையும் துண்டித்துவிட்டு இந்த பாதகத்தைச் செய்துள்ளனர்

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments