பொத்துவில், அறுகம்பே பிரதேசத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி அங்கிருந்தவர்களை பொய்யாக அச்சுறுத்திய நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டியில் இருந்து அறுகம்பே பிரதேசத்துக்கு வந்தவர்களிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அறுகம்பே பகுதியில் 3 இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்த நபர் அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனைச் சுற்றுலா பயணிகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சாய்ந்தமருது , அல்ஹிலால் வீதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 Comments