Ticker

6/recent/ticker-posts

ஈரானில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயம்.


ஈரான் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில் அவரது மையவாடி அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது.

தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்ததில் மேலும் 60 பேர் காயமடைந்ததாக
தெரிவிக்கப் படுகிறது.

இது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கெர்மனின் துணை ஆளுநரை மேற்கோள் காட்டி தெரிவிக்கப் படுகிறது


ஒரு வீதியில் பல உடல்கள் இருப்பது போன்ற காணொளி இணையத்தில் பரவி உள்ளது

2020 இல் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானியை நினைவுகூரும் விழாவின் ஒரு பகுதியாக இன்று புதன்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் மையவாடியை நோக்கி நடந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த நபராக சுலைமானி காணப்பட்டார்.

குத்ஸ் படையின் இரகசியப் பணிகள் மற்றும் அதன் வழிகாட்டுதல், நிதி, ஆயுதங்கள், உளவுத்துறை மற்றும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட நேச நாட்டு அரசாங்கங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகளை வழங்குவதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

2020 படுகொலைக்கு உத்தரவிட்ட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுலைமானியை "உலகில் எங்கும் நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று விவரித்து இருந்தார்.

Post a Comment

0 Comments