Ticker

6/recent/ticker-posts

கேகாலை சமகி ஜன பலவேகய அலுவலகத்தில்துப்பாக்கி சூடு.. பெண் ஒருவர் பலி

 


கேகாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் கேகாலை, ஹபுதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் களுகல்லவில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) அலுவலகத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எதிர் கட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பெண் மூன்றாம் தரப்பினரால் சுடப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நேற்றும் இலங்கையில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று மாலை பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக 28 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments