Ticker

6/recent/ticker-posts

பிட்டிகல சம்பவம் தொடர்பில் பொலீசார் விளக்கம்...! சூட்டிங்

 


பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சந்தேக நபரே பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்...!


பிட்டிகல சம்பவம் தொடர்பில் பொலீசார் விளக்கம்...!


பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 37 வயதுடைய நபர்பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.


முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைசந்தேக நபர் கத்தியால் குத்திய சம்பவம் பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


பின்னர்பிடிகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்றுசம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு காயமடைந்த பொலிஸ்உத்தியோகத்தருக்கு உதவுவதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சந்தேக நபர் பொலிஸ்குழுவினரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதுடன் கைக்குண்டு போன்ற பொருளைபொலிஸ் அணி மீது வீச முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்துதற்காப்புக்காகவும்மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும்சந்தேக நபர் மீது காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார்மேலும் தெரிவித்தனர்.


காயமடைந்த சந்தேக நபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்பிட்டியஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


சந்தேக நபர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட

ASP யினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments