Ticker

6/recent/ticker-posts

ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு முப்படையினரிடம் ..

 


இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு முப்படையினரிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தம்மை பதில் ஜனாதிபதியாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும், அவ்வாறான ஒருவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிக்கையொன்றை வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மத்தியில் வதந்திகள் பரவி வருவதாகக் கூறிய அவர், முப்படையினருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

அப்பாவி மற்றும் நிராயுதபாணிகளுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துமாறும் முப்படையினரை பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments