Ticker

6/recent/ticker-posts

பஸ் தீ பற்றியதில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழப்பு – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! Video


பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவு பஸ் ஒன்றில்

60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்த போது பஸ்சில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ்சை ஓட்டுனர் நிறுத்திய போதும் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பினர்.

ஆனால் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில் கருகி உயிரிழந்ததோடு. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில், பஸ்சில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தீப்பிடித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்சில் சென்ற போது விபத்தில் சிக்கினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6



Post a Comment

0 Comments