Ticker

6/recent/ticker-posts

கடலூரில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 11ம் வகுப்பு மாணவி: 10ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு… வீடியோ

 Cuddalore | பள்ளியின் கழிவறையில் 11-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. கழிவறையின் அருகிலேயே குழந்தை இறந்து கிடந்த நிலையில் மாணவியிடம் விசாரணை நடக்கிறது. 11-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில், மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான 10-ம் வகுப்பு மாணவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்குதான் இந்த குழந்தை பிறந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.


அந்த மாணவியின் விவரங்களை கண்டுபிடித்த போலீசார், அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உறவினரின் மகன் 10-ம் வகுப்பு படிக்கும் நிலையில், அவர்தான் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்படவே கழிவறைக்கு சென்ற மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை கழிவறையின் பின்புறம் போட்டுவிட்டு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான 10-ம் வகுப்பு மாணவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


Post a Comment

0 Comments