Ticker

6/recent/ticker-posts

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து!..


வாய்மூலமாகவாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போதுநுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின்விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.


பதுளைபொது வைத்தியசாலையின் 30 வயதுடைய வைத்தியர் ஒருவர்நேற்று கராப்பிட்டிபோதனா வைத்தியசாலையில் எக்மோ இயந்திர உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத்தெரிவித்துள்ளார்


வேறு நோய்கள் இல்லாதபுகைப்பழக்கமற்ற 30 வயதான குறித்த நபரின் நுரையீரலுக்குஎவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட என்பது குறித்து தாம் புதுமையடைந்ததாக வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்இதற்கு சில காரணங்கள் உள்ளன.


அண்மைக் காலமாக பெற்றோல் வரிசையில் காத்திருந்த அவர்சரியாக உணவுஉட்கொண்டாராஎன்பதில் சந்தேகம் உள்ளது


மழையிலும்வெயிலிலும் அவர் வரிசையில் காத்திருந்துள்ளார்அத்துடன்ஒருவாகனத்திலிருந்து இன்னுமொறு வாகனத்திற்காகவாய்மூலம் எரிபொருளைப்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இந்த அனைத்து காரணங்களினால்அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கும்தற்போதைய காலத்தில் பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியமானகும்பெற்றோலில்உள்ள இரசாயனத்தினால்நுரையீரல் பாதிக்கப்படலாம்


 சிறு பற்றீரியா அல்லது வைரஸ் உடலினுள் சென்றால்உடலில் நோயெதிர்ப்பு சக்திகுறைவடையும்போதுஇதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என வைத்தியர் கபிலானிவித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments